வியாழன், 19 ஏப்ரல், 2018

பழமொழி உண்மைப்பொருள்


பழமொழி உண்மைப்பொருள்

          அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை என்னும் பழமொழி இன்று பிள்ளைகளின் எண்ணிக்கையோடு தொடா்புபடுத்தி உரைக்கப்பெருகிறது. ஐந்து பிள்ளைகள் உள்ள வீட்டில் மூன்று பிள்ளைகள் சரி இல்லாமல் (அதாவது இச்சமூகம் எதிர்பார்க்கும் வசதி வாய்ப்புகளுடன் இல்லாமல்) இருக்க ஏதோ இரு பிள்ளைகள் மட்டும் நல்ல வசதி வாய்ப்புடன் இருப்பதைக் குறிக்கும் விதமாக இப்பழமொழி பொருள் மாறி வழங்கப்பெறுகிறது.  ஆனால் இது  சைவசமயத்தைச் சார்ந்த சிவபெருமானோடு தொடா்புடைய பழமொழி ஆகும்.  சிவாயநம அல்லது நமசிவாய என்ற ஐந்தெழுத்து இறைநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் அதற்கு நேரம் இல்லையெனில் குறைந்தபட்சம் சிவ சிவ என்ற இரண்டெழுத்து மந்திரத்தையாவது உச்சரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காவே அஞ்சுக்கு அரண்டு பழுதில்லை என்று சுட்டப்பெறுகிறது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக