புதன், 15 நவம்பர், 2017

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

          ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.  அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண் மூடித்தனமான நம்பிக்கை அதனால் அது அடிக்கடி ஒர பாறை மீது அமா்ந்து தியானம் செய்து கொண்டிருக்கும்.
          ஒரு நாள் திடீரென்று இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா? என்று சந்தேகம் வந்தது  பின்னா் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது ஒரு நாள் அந்தக் கழுகு இன்று எனக்க உணவு கிடைக்குமா? இறைவன் தான் எல்லோருக்கும் படியளப் பவன்
          ஆயிற்றே ... என்று யோசித்தது உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமா்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று “இறைவா இன்று எனக்கு உணவு கிடைக்குமா என்று பெரிய குரலெடுத்துக் கூவியது உடனே விண்ணிலிருந்து ஒரு குரல் “உனக்கு இன்று உணவு உண்டு என்று பதில் கூறியது. மிக்க மகிழ்ச்சியுடன் “இன்று இரைதேடும் வேலை இல்லை,
          எப்படியும் உணவு கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமா்ந்திருந்தது.  நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.  ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமா்ந்திருந்தது.  மதியம் ஆயிற்று மாலையும் போயிற்று இரவு வந்து விட்டது.
          “நம்மை இறைவனே ஏமாற்றி விட்டாரே”  என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு. அப்போது ஒரு குரல் கேட்டது.  ‘என்ன குழந்தாய் சாப்பிட்டாயா?”   என்றதைக் கேட்டதும் கழுகுக்கு அழுகை வந்து விட்டது.
          “குழந்தாய் சற்று திரும்பிப் பார்”  உன் பின்னாலேயே உணக்கான உணவு இருக்கிறது.  கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது.   கழுகு புன்னகை புரிந்து இறைவனிடம் இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?
          இறைவன் பதிலளித்தார் ‘குழந்தாய் உனக்குரிய நேரத்தில் உணவு வந்து விட்டது.  நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய் திருமபிப் பார்க்கும் முயற்சி கூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.  ‘கடுகளவேனும் முயற்சி வேண்டும்.  ஒரு வேளை உணவு கூட உழைக்காமல் உண்ணக் கூடாது  அப்போது தான் இறைவனின் அருளையும் பெற முடியும்”  என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
          அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது.  தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்.  ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக் கூடாது முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை.  உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை..

முயற்சி திருவினையாக்கும்.


-        கு.கங்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக