புதன், 15 நவம்பர், 2017

கார்த்திகை சோமவாரம்


தலையங்கம்

தி.பி.2048 (கி.பி.2017) காா்த்திகைத்  திங்கள்


தேன் - 1                                                         துளி-11
கார்த்திகை சோமவாரம்




          கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கள் கிழமை) மிகவும் சிறந்ததாகும்.  இந்நாளில் சிவ ஆலயங்களில் 108, 1008 சங்காபிடேகங்கள் நடைபெறும்.  கார்த்திகை மாதத்தில் சிவபெருமான அக்னிப்பிழம்பாக இருப்பதால் அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிடேகம் செய்யப்படுகிறது.

          ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள் சந்திரன் என்ற பொருளும் உண்டு சந்திரன் தோன்றியது கார்த்திகை மாதம் சுக்லபட்ச அஷ்டமிதிதியில்தான் சந்திரன் தட்சனின் மருமகன் ஆவார். அவருடைய இருபத்தியொரு பெண்களையும் மணந்து கொண்டார்.  ஆனால் ரோகிணியுடன் மட்டும் அன்பாக இருந்தார்.  அதைக் கண்ட தட்சன் கோபம் கொண்டு ‘தேயக் கடவது’ என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.

          நீங்கள் தட்சனிடம் சாபம் பெற்ற சந்திரன் சாபவிமோசனத்திற்காக திங்களுா் சென்று சிவபெருமானை எண்ணி  தவம்  இருந்த பொழுது முழுமையாக தேய்வதற்கு மூன்று நாட்கள் முன் சந்திரன் மீது இரக்கம் கொண்டு சிவபெருமான்  தன் தலையில் எடுத்து சூடிக் கொண்டார் சந்திரன் நவக்கிரகங்களில் ஒருவா் ஆனார்.  அன்றைய தினம் கார்த்திகை சோமவாரம் ஆகும்.  அன்று முதல்  வளா்ந்தார் சந்திரன், ஆனாலும் சாபத்தால் தேய்ந்தார்.

          சந்திரன் சிவபெருமானிடம் சோமவாரம் தோறும் பூசை செய்து விரதம் இருப்பவா்களுக்கு வேண்டியதை அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  சிவபெருமானும் அவ்வாறே அருளினார்.  எனவே பக்தர்கள் கார்த்திகை சோமவாரத்தில் விரதம் கடைப்பிடிக்கின்றார்.  அன்று சிவன் கோயில்களிலும் சிறப்பு ஆபிடேக ஆராதனை நடைபெறுகிறது.
                                                                                                                    தோழமையுடன் ,
தேமதுரம் ஆசிரியா்குழு,




ஆசிரியர்
ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்

இணையாசிரியர்
பெ.குபேந்தரன்

துணையாசிரியர்
ந.முத்துமணி

ஆசிரியர் குழு 
கா.சுபா 
க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
வ. மீனாட்சி
தீபா 
கணினிதட்டச்சு
ப.லெட்சுமி
தொடர்பு முகவரி
தமிழ்ப்பண்பாட்டு மையம்,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக