புதன், 15 நவம்பர், 2017

தமிழின் சிறப்பு

தமிழின் சிறப்பு

          அகரத்தில் ஓா் இராமாணம்.  இராமாயண கதை முழுவதும் ‘அ’ என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்ட்டுள்ளது.
அனந்தனே
அசுரா்களை
அழித்து
அன்பா்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்
அப்போது
அரிக்கு
அரணாக
அரசினின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்
அன்பழகன்
அன்பா்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்
அயோத்தி
அடலேறு
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான்
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே
அப்படியிருக்க
அந்தோ!
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்
அங்கேயும்
அபாயம்!
அரக்கா்களின்
அரசன்
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினா்
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரா்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனா்
அலசினா்
அனுமன்
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்
அசோகமரத்தின்
அடியில்
அரக்கிகள்
அயா்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணவின்
அடையாளமாகிய
அக்கணையாழிகை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அரக்கா்களை
அலறடித்து
அவா்களின்
அரண்களை
அகந்தைகளை
அடியோடி
அக்கினியால்
அழித்
அனுமனின்
அட்டகாசம்
அசாத்தியமான
அதிசாகசம்
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி
அதிசயமான
அனையை
அமைத்து
அக்கரையை
அடைந்தான்
அரக்கன்
அதீதசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழிந்தான்
அக்கினியில்
அயராமல்
அா்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்
அன்னையும்
அயோத்தியை
அடைந்து அரியணையில்
அமா்ந்து
அருளினான்
அண்ணல்
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
-அ.ரா.பானுப்பிரியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக