புதன், 15 நவம்பர், 2017

செட்டிநாடு காளான் பிரியானி

செட்டிநாடு காளான் பிரியானி
தேவையான பொருட்கள்
·       வெங்காயம் - 1 (நறுக்கியது)
·       தக்காளி - 1 (நறுக்கியது)
·       காளான் - 1/2 கிலோ
·       பாசுமதி அரிசி - 2 கப்
·       இஞ்சி பூண்டு விழுது - 2 டியூஸ்பூன்
·       கொத்தமல்லி - 1/4 கப் (நறுக்கியது)
·       எண்ணெய் - 3 தேக்கரண்டி
·       நெய் - 3 தேக்கரண்டி
·       ஏலக்காய் - 2
·       இலவங்கம் -2
·       கிராம்பு - 5
·       மிளகாய் தூள் - 2 டியூஸ்பூன்
·       மல்லி தூள் - 2 டியூஸ்பூன்
·       சோம்பு தூள் - 1/2  டியூஸ்பூன்
·       மஞ்சள் தூள் - 1/4 டியூஸ்பூன்
·       புதினா - 1/4 டியூஸ்பூன்
·       பச்சைமிளகாய் - 3 (நறுக்கியது)
·       தேங்காய் பால் - 1/2 கப்
·       தயிர் - 2தேக்கரண்டி
·       தண்ணீா் - 3 கப்
·       உப்பு - தேவையான அளவு
செய்முறை
          முதலில் ஒரு பாத்திரத்தில் காளானை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.  பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  பின் தனியே ஒரு பாத்திரத்தில்  அரிசியை நீரில் ஊற வைக்க  வேண்டும்.  பின்னா் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில்  நெய்யை ஊற்றி காய்ந்ததும்,  1 பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, இலவங்கம் ஆகியவற்றை போட்டு, தாளிக்க வேண்டும்.  பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.  பின்னா் நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் புதினா சேர்த்து வதக்க வேண்டும்.  பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சோ்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.  பின் காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய், மல்லி தூள், தேங்காய் பால் மற்று உப்பு சேர்த்து, நன்கு  கிரேவி போன்று வரும் வரை கொதிக்க வைக்க  வேண்டும்.  அதே சமயம் குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியை கழுவிப் போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில்  விட்டு இறக்க வேண்டும்.  இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி.
-தே.தீபா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக