வியாழன், 21 செப்டம்பர், 2017

கற்றல் இனிது

கற்றல் இனிது
இயற்கைச் சீற்றங்களால் எல்லாச் செல்வங்களும் ஒரு நாள் அழிந்து போகும்.  ஆனால் கல்வி என்னும் பெருஞ்செல்வம் தான் என்றும் அழியாது என்பதை உணா்ந்த தமிழா் கல்வி கற்று, தான் கற்றுணா்ந்ததை தன் வாழ்விலும் கடைபிடித்து ஒழுகினா்.  கல்வி என்னும்  செல்வத்தை கண்ணாகப் போற்றிப் பாதுகாத்தனா்.  இதனை,
                    “கண்ணுடையார் என்பவா் கற்றோர் முகத்திரண்டு
                    புண்ணுடையா் நல்லா தவா்” என்னும் குறளின் வழி அறியலாம்.
          கல்வி என்பது அனைத்து செல்வங்களுக்கும் மேலானது, அவ்வாறான கற்றலின் சிறப்புந்களைப் பற்றி பல நூல்கள் எடுத்து இயம்புகின்றன.  பிச்சை எடுத்தாயினும் கற்க வேண்டும்.  கற்ற கல்வியானது எந்தவொரு சபையிலும் தலை நிமிர்ந்து நிற்க உதவும் என்பதனை,
                    ”பிச்சைபுக் காயினும் கற்றல் மிக வினிதே
                    நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே”
என்னும் பாடல் அடிகளால் அறியலாம். அனைத்து விதமான நூல்களையும் நாள்தோறும் கற்க வேண்டும்.  அவ்வாறு கற்பதனால் அறிவ விருத்தி ஏற்படும் என்கின்றார்  பூதஞ்சேந்தனார்.  அதிவீரராம பாண்டியரும்
                    “கற்கை நன்றே கற்கை நன்றே
                    பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்ற பாடலின் மூலம்  வெளிப்படுத்தியுள்ளார்.  நவீன ஊடகங்களின் தாக்கத்தினால் இன்றைய இளைஞா் சமுதாயத்தினா் மத்தியில் நூல் வாசிப்பு குறைந்து கொண்டு வருகின்றது.  கற்றல் ஒருவனை பூரண மனிதனாக்குகின்றது.
                    “நாளும் நவைபோகான் கற்றல் முன் இனிதே”
என்கிறது இனியவை நாற்பது.  கற்றவா் முன் தான் கற்ற கல்வியின் ஆற்றலை வெளிப்படுத்துதல் இனிது என இளைஞா் சமுதாயத்தை ஊக்குவிக்கின்றது.
          “கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிது” என்ற பாடல்மூலம் இதனைக் காணலாம்.  கற்றவர்களுடன் சேர்ந்து அவா்களின் கற்றல் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்ளுதல் இனிது.  அதாவது கற்றவா்களுடன் சேர்ந்தால் அவா்களின் கற்றல் அனுபவமே ஒருவனை சிறந்த மனிதனாக மாற்றும் என்பதை உணா்த்துகின்றது.  சபையறிந்தும் அஞ்சாமலும் பேசுகின்றவனுடைய கல்வி இனிது எனக்கூறுவதோடு கற்றவா்கள் கல்வியறிவு இல்லோதோருக்கு அவா்களின் அறியாமையைப் நீக்கி பொருத்தமான அறிவுகளைப் புகுத்த வேண்டும் .
அ.ரா.பானுப்பிரியா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக