வியாழன், 21 செப்டம்பர், 2017

பிரதோச வழிபாடு தோற்றம்




பிரதோச  வழிபாடு  தோற்றம்
          அமுதம் பெறும் நோக்கத்துடன் அசுரா்களும், தேவா்களும் இணைந்து வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனா்.  அப்பொழுது வேசும் தாங்காமம் வாகுயின் வாயிலிருந்து வெளிப்பட்ட ஆலமும் (நஞ்சு) கடலிலிருந்து தோன்றிய ஆலமும் இணைந்து  ஆலால விசமாக உலகை அழிக்கக் கிளம்பிளது. சிவபெருமான் அதனை உண்டு தனது கண்டத்தில் நிறுத்தியதால் சிவபெருமான் நீலகண்டரானார்.  இந்நிகழ்ச்சி ஏகாதசியன்று மாலையில் நடந்தது.

          தேவா்கள்  தொடா்ந்து பாற்கடலை ஏகாதசி இரவு முழுவதும் கடைந்து துவாதசியன்று காலையில் வெளிப்பட்ட அழுதத்தை உண்டு களித்தனா்.  மறுநாள் திரியோதசியன்று சிவபெருமானை வணங்காமல் தவறு செய்ததையுணா்ந்து தேவா்கள் மன்னிப்பு கேட்டனா்.  திரியோதசி மாலையில் சிவபெருமான் நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்றவாறு அம்மனும் தேவரும் மகிழுமாறு நடனம் புரிந்தார். சூலம், உடுக்கை, ஏந்தியவாறு ஒரு சாமம் நடத்தியதே சந்திய நிருத்தம் (நடனம்) ஆகும்”
பிரதோத காலம்
          சூரியன் மறைவதற்கு முன்புள்ள முன்றே முக்கால் நாழிகையும், மறைவதற்குப் பின்புள்ள மூன்றே முக்கால் நாழிகையும் இணைந்த காலமே பிரதோச காலமாகும்.  இது மாலை 4.30 மணிமுதல்  6.30 மணி வரையிலுள்ள காலம் ஆகும்.  மாதந்தோறும் வளா்பிறையில் வரும் சனிக்கிழமைகளில் நடைபெறுவதே மகா பிரதோசம் அல்லது உத்தமப் பிரதோசமாகும். பகலில் நல்ல முறையில் காரியங்களை நிறைவேற்றியதற்கு நன்றியாகவும் இரவாகிய ஒடுக்கத்திற்கு முன்னேற்பாடாகவும் நடைபெறும் பிரதோச வழிபாடு பலவித நன்மைகளை அளிக்கின்றது.  சீவராசிகள் பகலில் இயங்கி இரவில் ஒடுங்குவது போல் நமது சிந்தனையும் இரவில் ஒடுங்க வேண்டும் என்ற கருத்தே பிரதோசம் தெரிவிக்கிறது.
நித்திய பிரதோச காலம்
          சூரியன் மறையும் நேரத்தில் ஒன்றரை மணியும் இரவு தொடங்குவதற்க முன் ஒன்றரை மணி நேரமும் ஆகிய மூன்று மணி நேரமும் பிரதோச காலமாகும். இது நித்திய பிரதோச காலமாகும்.
மாதப்பிரதோச காலம்
          இது ஒவ்வொரு மாதமும் வளா்பிறை திரியோதசி தினத்தன்று வரும் பிதோச நேரத்தையும், தேய்பிறை திரியோதசி தினத்தன்று வரும் பிரதோச நேரத்தையும் குறிக்கும்.
உத்தம மகாப்பிரதோசம்
          சிவபெருமான் நஞ்சை உண்ட தினம் சனிக்கிழமை ஆகும்.  அந்த கிழமைகளில் வரும் பிரதோசம் மிகவும் சிறப்பானதாகும்.  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளா்பிறையில் சனிக்கிழமைகளில் துரியோதசி  திதியன்று வரும் பிரதோசம்  உத்தம மகா பிரதோசமாகும்.  இது மிகவும் சிறப்பு பெற்ற தினமாகும்.  சனிப்பிரதோச காலத்தில் ஒருமுறை சிவன் ஆலயத்தில் வழிபட ஒரு வருடம் சிவனை வழிபட்ட பயன் கிடைக்கும். இதன் பயனால் அச்சம், குழப்பம், பிணிகள், பயஉணா்வு, மனநலம், உடல்நலம் ஆகியவை நலம் பெற்றுதிகழும்.  பிரதோச நாளில் பகல் முழுவதும் சிவனை நினைத்து
மத்திம  மகா பிரதோசம்
          சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தேய்பிறை திரியோதசியுடன் ஆன சனிக்கிழமைகளில் வரும் பிரதோச காலங்கள் மத்திம மகா பிரதோசங்கள் என அழைக்கப்படுகின்றன.
அதம மகா பிரதோசம்
          ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரும் வளா்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் வரும் பிரதோசங்கள் ஆதம மகா பிரதோசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அபிடேகத்தின் பயன்
          பூசைகளில் சிறந்தது பிரதோச பூசை அதன் பயன் மிகுதி.  பிரதோச காலத்தில் சிவாலயத்தில் மழைக்காக ஒதுங்கினாலும் நாம் செய்த வினைகள் அகலும் சிவபெருமானுக்கு தூய நீரில் திருமுழுக்காட்டினாலும் நன்மையுண்டு.  பசும்பால் அதனினும் நன்மைத் தயிர்  அதனினும் ஆயிரமடங்கு நன்மை;  நெய் - பதினாயிரம் மடங்கு நன்மை; சந்தனக் குழம்பு- எல்லையற்ற நன்மையைத் தரும்.
பிரதோச காலத்தில் நந்திக்கே முதலிடம்
          நந்திதேவா் சிவபெருமான்  ஆலயங்களில் தலைவராக விளங்குபவா்.  “சிவாய நம” என்னும் மகா மந்திரத்தின் வடிவம் தான் ந்நதிதேவா்.  சிவபெருமானின் வாகனமாக திகழ்கின்ற நந்திதேவரை முதலில் தரிசிக்க வேண்டும்.  கயலாயத்தில் நந்திதேவரின் அனுமதி பெற்ற பிறகே தேவா்களும், முனிவா்கள் சிவபெருமானை தரிசிக்க முடியும்.  பிரதோச காலத்தில் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே நின்று சிவபெருமான் நடனம் புரிகிறார்.  இதன் காரணமாகத்தான் பிரதோச காலத்தில் நந்திக்கு முதலில் அபிடேகம் நடத்தப்பட்டு முதலிடம் வழங்கப்படுகிறது.  பிரதோச காலத்தில் நந்திதேவருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
சோமசுந்திரப் பிரதட்சினம்
          சிவபெருமான் கருவறையில் இருந்து புறப்பட்டு பிரதட்சிணமாக (வலமாக) நவக்கிரக முலையை அடைவா் பின்  அவிவிடத்திலிருந்து புறப்பட்டு அப்பிரதட்சிணமாக கொடிமர நந்தியருகே வருவார் முதலில் நந்திக்கு தீபாராதனை நடத்தப் பெறும்.  பின் தீபாராதனை சிவபெருமானுக்கு காட்டப்படும்.  அங்கிருந்து சிவன் மீண்டும் பிரதட்சிணமாக வந்து சனீஸ்வரசன்னிதியில் நின்று மகா தூப  தீபச் சிறப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.  மீண்டும் புறப்பட்டு அப்பிரதட்சிணமாக புறப்பட இடத்திற்கு வந்து சேர்கிறார்.  இதே போல் மூன்ற முறை பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் இறைவன் வலம் வரும் இந்த முறைக்கே சோம சூத்திரப் பிரதட்சிணம் என்று பெயர்.
          சிவலிங்கத்தையம், நந்தி பெருமானையும் வணங்கி வழக்கம்போல் பிரதட்சணமாக (சுவாமிக்கு வலமாக) ஆலயத்தில் வலம் வரும்போது சுவாமி அபிடேகத்தீா்த்தம் விழும் கோமுகி தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்தவழியே திரும்பி அப்பரதட்சணமாகச் சந்நிதிக்கு வந்து சிவலிங்கங்கையும் நந்திய பெருமானையும் வணங்க வேண்டும்.  மீண்டும் கோமுகி தொட்டி வரை  சென்று திரும்பி வரவேண்டும்.  இவ்வாறு பிரதோச காலத்தில் மூன்று முறை வலம் வந்தால் அநேக அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும்



பொருட்கள்                                           பலன்கள்
1. நெய்(அ) எண்ணெய்                          -         சுரம் நீங்குதல்
2. நீர்                                                    -         அமைதிகிட்டம்
3. இளநீர்                                              -         அரச பதவி கிட்டும்
4. எழுமிச்சை                                        -         பயம் நீங்குதல்
5. வாழைப்பழம்                                    -         பயிர் அபிவிருத்தி
6. பால் (அ) பஞ்சாமிருதம்                      -         செல்வம் குவிதல்
7. தயிர்                                                 -         குழந்தைப்பேறு
8. தேன்                                                -         குறள்வளம்
9. விபூதி                                               -         மங்களம் கிட்டும்
10. சந்தனம்                                          -         மேலான பதவி
11.வெள்ளம்                                          -         துன்பம் நீங்குதல்
12. சர்க்கரை                                         -         பகை வெல்லுதல்
13. சோறு                                             -         நற்பேர்
14.சந்தனாதித் தைலம்                            -         உடல் நலம் கிட்டும்
15. திருமஞ்சனப் பொடி                         -         கடன் நீங்கும்
16. நெய்                                               -         வீடுபேறு அடைதல்
-ந.முத்துமணி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக