வெள்ளி, 16 ஜூன், 2017

அழகப்பா பல்கலைக்கழகத்தை அரியணையில் அமர்த்திய தகைசால் துணைவேந்தர்



           தேன் - 1            துளி-6   தி .பி 2048 (கி.பி 2017)  ஆனித்திங்கள்(சூன்மாதம்)


                                                   கடந்த சூன்-2016 முதல் ஏப்பிரல் - 2017 வரை இந்தியாவில் 86 பல்கலைக்கழகங்களில் தேசியத் தர நிர்ணயக்குழு மதிப்பீடு செய்தது, அவற்றுள் 4 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 5 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் என 9 பல்கலைக்கழகங்கள் A+ தகுதியைப் பெற்றுள்ளன.

          A+ தகுதி பெற்ற நான்கு மாநிலப் பல்கலைக்கழகங்களுள் மகாராஷ்டிரா சாவித்திரி பாய் பூலே புனே பல்கலைக்கழகம் (3.60), ஒடிசா உத்கல் பல்கலைக்கழகம் (3.53), காஷ்மீரைச் சார்ந்த ஜம்மு பல்கலைக்கழகம் (3.51) ஆகிய மாநிலப் பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் அதிகப் புள்ளிகளைப் (3.64) பெற்று தமிழகத்தின் அழகப்பா பல்கலைக்கழகம் முதல் தரம் பெற்றுள்ளது  தமிழகத்திற்கே பெருமை அளிக்கக்கூடிய  சரித்திர சாதனையாகும். 

 தமிழகத்தில் முதல்முறையாக A+ தகுதியை அழகப்பா பல்கலைக்கழகம் வென்றெடுக்க அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதிப்புறு, பேரா.சொ.சுப்பையா அவர்களும், ஆசிரிய -அலுவலர்களும், மாணவர்களும்  அயராது உழைத்ததன் விளைவுதான் இவ்வெற்றிக்கனி.

          துணைவேந்தர் அவர்கள் பதவியேற்ற பொழுது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “அழகப்பா பல்கலைக்கழகம் 2016 ஆம் ஆண்டில் தேசிய தர நிர்ணயக் குழுவின் மூன்றாம் கட்ட மறுமதிப்பீட்டிற்குச் செல்ல உள்ளது அதில் ஏற்கனவே பெறப்பட்ட ஏ தகுதியினைத் தக்கவைத்துக்கொள்வதுடன் பல்கலைக்கழக நிதிக்குழுவின் உயரிய தகுதியான ஆற்றல் சார் பல்கலைக் கழக தகுதியினைப் பெறுவதற்கு தொடா்ந்து முயற்சி செய்வதுமே எனது பணியாகும்” என்று தெரிவித்தார். (சான்று: ‘விடுதலை’ மின்னிதழ் 06.06.215,  16:33)

          வினைத்திட்பம் அதிகாரத்தில் திருள்ளுவா்
          “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
          திண்ணிய ராகப் பெறின்”

என்று குறிப்பிடுவதைப் போன்று வினைத்திட்பம் மிக்க துணைவேந்தர் சொன்னதைக் காட்டிலும் (ஏ தகுதியைத் தக்க வைத்தல்) சிறப்பாக செய்து முடித்து (ஏ+ தகுதி பெற்று ) சாதித்திருக்கிறார்.

          துணைவேந்தராகப் பணியேற்ற ஈராண்டுகளில் நூறாண்டு வளர்ச்சி காணச் செய்த பேராற்றல் நிரம்பிய துணைவேந்தர் ஆற்றிய பல்கலைக்கழக வளா்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்டால் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்..

          புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட மையங்கள் மற்றும் துறைகள், வள்ளல் அழகப்பா் அருங்காட்சியகம், வேறு எந்தப் பல்கலையிலும் இல்லாத தமிழ்ப்பண்பாட்டு மையத் துறை, தமிழ்ப்பண்பாட்டு மைய அருங்காட்சியகம், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை, 12 ஆவது நிதிக்குழு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கிய நிதியை முழுமையாகச் செலவு செய்து திட்டப்பணிகளை வெற்றிகரமாக முடித்து பாராட்டு பெற்றது, அமெரிக்காவின் தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், செக் குடியரசு செயல்முறை மருத்துவக் கழகம், லண்டன் மான் செஸ்டர் பல்கலைக்கழகம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால்  கல்வி மற்றும் ஆராய்ச்சித் தரத்தினை உலக அரங்கில் உயா்த்தியது, வளா்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப யுகத்திற்குத் தகுந்தவாறு பல்கலைக்கழகத்தைத் துறைதோறும் துறைதோறும் தகவமைத்தது இவை போன்ற இன்னும் ஏராளமான செயல்பாடுகளால் இன்று அழகப்பா பல்கலைக் கழகத்தைப் புகழின் உச்சியில் உயா்த்திய பெருமை மாண்பமை துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவா்களையே சாரும்.

          அழகப்பா பல்கலைக்கழகத்தின் பொற்காலமாய்த் திகழும் துணைவேந்தா் அவர்களின் சீரிய தலைமையில் நாங்கள் மாணவர்கள் என்று சொல்லிக்கொள்வதில் தனிப்பெருமை அடைகிறோம்.  தகைசால் துணைவேந்தர் அவர்களின் தொடர்பணி உயரங்களைத் தாண்டி உச்சங்களை வெல்ல பணிந்து வாழ்த்துகிறோம்..

அன்பின் வாழ்த்துகளுடன்..
தேமதுரம்-ஆசிரியர் குழு




ஆசிரியர்

.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்


இணையாசிரியர்

பெ.குபேந்திரன்

துணையாசிரியர்

 கா.சுபா 


ஆசிரியர் குழு 

பெ.குபேந்திரன்

க.கலைச்செல்வி
கு.கங்காதேவி
ந.முத்துமணி

மீனாட்சி



கணினிதட்டச்சு

.லெட்சுமி


தொடர்பு முகவரி

தமிழ்ப்பண்பாட்டு மையம்,

அழகப்பா பல்கலைக்கழகம்,

காரைக்குடி-3.
தொலைபேசி:04565-223255


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக