திங்கள், 15 மே, 2017

வண்ணதாசன்

வண்ணதாசன்

     வண்ணதாசன் திருநெல்வேலியைச் சோ்ந்தவா்.  இவரது இயற்பெயா் கல்யாணசுந்தரம் ஆகும்.  இவா் ‘கல்யாண்ஜி’ என்ற பெயரில் எழுதும் கவிதைகள் இலக்கிய உலகில் பலதரப்பினராலும் கொண்டாடப்படுகிறது.  இவா் நவீன இலக்கிய விமா்சன கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.  70 வயதான இவா் வங்கியில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவா்.  அரைநூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக  எழுதி வருகிறார்.  13 சிறுகதைத் தொகுப்புகள், 13 கவிதைத் தொகுப்புகள் ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் அடங்கும்.  தமிழக அரசின் கலைமாமணி மற்றும் தமிழ்ப்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  2016-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம்’ விருதுக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.  அது மட்டுமின்றி மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு  ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளைத் தோ்வு செய்து, விருது வழங்கி வருகிறது சிறந்த தமிழ் படைப்புக்கான விருது வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு 2016-இல் சாகித்ய அகாடமி விருதுக் கிடைத்துள்ளது.
            இவருடைய தந்தையும் தி.க.சிவசங்கரனும் 2000-ஆம் ஆண்டில் விமா்சனங்கள், மதிப்புரைகள், போட்டிகள் என்னும் விமா்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஓா் எழுத்தாளா் என்பது குறிப்பிடத்தக்கது.
-சு.லாவண்யா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக