திங்கள், 15 மே, 2017

சிறு சிறு நம்பிக்கைகள்

சிறு சிறு நம்பிக்கைகள்

மண்ணில் போட்ட விதைகள்
            இன்று மரமாய் நிற்கிறது!
நிலாச்சோறு சாப்பிட்டவன்
            இன்று நிலாவுக்கேச் செல்கிறான்!
உழைத்து வாழ ஆசைப்படுபவன்
            நாளைய உலகில் உயா்ந்து நிற்பான்!
உழைக்கின்ற மனிதரெல்லாம் உயா்ந்து நின்றால்
            சமதா்மச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்பாய்!
இந்துவுடன் முகம்மதியா் கிறித்தவா் கூடிநின்றால்
            அந்நியா்கள் நமைப்பார்த்து அஞ்சிநிற்பார்!
விண்வெளிக்கு விஞ்ஞானம் மெய்ஞானம் படித்தவா்
            இன்று எண்ணற்ற குழந்தைகளுகு்கு கனவு நாயகனாய் நிற்கிறார்!
தெருவோரக் குடிசையில் தொலைக்காட்சி பார்த்தவன்
            இன்று கையடக்க கருவியோடு தெருவில் அலைந்து திரிகிறான்!
மதுவென்னும் அரக்கனைத் தொட்டாலே
            உன் மதிப்பெல்லாம் குறையும் தன்னாலே!
ஆண்டவனிடம் பெண்குழந்தை வேண்டாமெனச் சொல்லலாமா
            வீடுவந்த செல்வமதை வீட்டைவிட்டுத்  தள்ளலாமா!

-பெ.குபேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக