செவ்வாய், 25 ஏப்ரல், 2017

சொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை

சொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை
முன்னுரை
            தமிழ் இலக்கண நூல்கள் திணையை உயா்திணை, அஃறிணை என இரு பிரிவாகப் பகுக்கின்றன.  திணை குறித்த தொல்காப்பியக் கருத்துகளோடு பின் வந்த இலக்கண நூல்களை ஒப்பிட்டு ஆராயுமுகமாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியத்தில் திணைப்பகுப்பு
            தொல்காப்பியம் திணையை உயா்திணை, அஃறிணை என இரு பிரிவாகப் பிரிக்கிறது.
            உயா்திணை என்மனார் மக்கட் சுட்டே
            அஃறினண என்மனார் அவரவ பிறவே
            ஆயிரு திணையின் இளசக்குமன் சொல்லே.  (தொல்.சொல்.1)
இந்நூற்பாவின் வழி மக்கட்சுட்டு உயா்திணை என்றும், மக்களல்லாத பிற பொருள் அஃறிணை என்னும் தொல்காப்பியம் பகா்கிறது.
ஒத்த மரபு
            திணை உயா்திணை, அஃறிணை என இருவகைப்படும் என்ற தொல்காப்பியரின் பகுப்பு முறையை ஏறத்தாழ எல்லா இலக்கண நூல்களுமே ஏற்றுக் கொள்கின்றன.  உயா்திணையில் அடங்குவன எவை, அஃறிணையில் அடங்குவன எவை என்பதில் மட்டுமே வேறுபாடுகள் காணப்படுகின்றன.
            மக்கட்சுட்டு உயா்திணை, மக்களல்லாத பிற பொருள்  அஃறிணை என்னும் தொல்காப்பியரின் கருத்தை சுவாமிராதம், தென்னூல், திமிணூல், தமிழ்க்காப்பு இயம் போன்ற இலக்கண நூல்கள் ஏற்றுக் கொள்கின்றன.
மரபு மாற்றம்
            மக்கள், நரகா், வானோர்  உயா்திணை, இவை ஒழிந்த உயிருள்ளனவும், இல்லனவும் அஃறிணை என நேமிநாதம் குறிப்பிடுகிறது.  (நேமி.27).  தொல்காப்பியம் வானோரையும், நரகரையும் உயா்திணை எனச் சுட்டவிலலை, வானோரும் நரகரும் நம் கண்களால் காண முடியாத, உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனை வடிவங்கள் எனத் தொல்காப்பியா் கருதியிருக்கக் கூடும்.  அதனால் வானோர், நரகரையும் உயா்திணை எனச் சுட்டவில்லை.  வானோரும் நரகரும் நம் கண்களால் காண முடியாத உண்மைக்கு அப்பாற்பட்ட கற்பனை வடிவங்கள் எனத் தொல்காப்பியா் கருதியிருக்கக் கூடும்,  அதனால் வானோரல் நரகரை தொல்காப்பியம் குறிப்பிடவில்லை,  ஆனால் நேமிநாதம் வானோர்,  நரகரை உயா்திணை எனக் குறிப்பிடுகிறது.  நேமிநாதத்தைப் பின்பற்றி நன்னூலும்,
            மக்கள் தேவா் நரகா் உயாதிணை
            மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை  (நன்.261)
எனக் குறிப்பிடுகிறது. இது குறித்து ச.வே.சு அவா்களின் கருத்து இங்கு கருதத்தக்கது.
            ”தொல்காப்பியம் மக்கள் மட்டும் உயா்திணை எனக் குறிக்கின்றது.  நேமிநாதம் நகரையும், வானோரையும் உயா்திணையில் சோ்த்துக் கொள்கிறது.  தேவா், நரகா் என முறை மாற்றுகின்றது நன்னூல்  சமுதாயத்தில் சமய எண்ணம் நுழைந்து இலக்கணத்திலும் புகுந்ததை இது சுட்டுகின்றது.  நகரையும் உயா்திணை எனக் கூறுவது எண்ணற்பாலது.”
            (ச.வே.சு., முன் அட்டை இல்லாத நூல் பக்.93-94)
            தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் போன்றவை நன்னூலை அடியொற்றியுள்ளன. 
            இனிய தமிழ் இலக்கணம் மக்களும் தேவரும் அறிவால் உயா்ந்தவா்கள் ஆதலால் உயா்திணை எனவும், மற்றவை அறிவால் இழிந்தவை  ஆதலால் அஃறிணை எனவும் இனிய தமிழ் இலக்கணம் இயம்புகிறது (இ.த.இ.92). நன்னூல் குறிப்பிடுவது போல நகரை உயா்திணை எனச் சுட்டாமல் மக்களையும் தேவரையும் மட்டுமே உயா்திணை எனச் சுட்டுகிறது இனிய தமிழ் இலக்கணம்.
            இனிய தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றி இலக தமிழ் ஐந்திலக்கணம் உயிருடைய மக்களும் தேவரும் உயா்திணை எனவும் அவை தவிர்த்த உயிர் உள்ளளவும்  இல்லாதனவும் அஃறிணை எனவும் குறிப்பிடுகிறது.  (இ.த.ஐந்.194)
            நன்னூலார் நரகரை உயா்திணையில் கூறுவார்.  ஆனால் இலகு தமிழ் ஐந்திலக்கணம், மாக்களை ஒத்துக் கயவராயுள்ளதால் நரகா் அஃறிணை எனச் கூறுகிறது.
            மேலும், கடவுள் உயா்திணையாக இருப்பினும் வழக்கில் அஃறிணை முடிவே வழங்கப்படும் என்றும், கயவரும் உள்ளம் திருந்திடில் உயா்திணையாவா் என்றும் குறிப்பிடுகிறது (இ.த.ஐந் 194) இக்கருத்தின் வாயிலாக இலக்கண நூல்களின் வழியாகவும் நற்பண்புகளைக் கூற முடியும் என்பதற்கு இலகு தமிழ் ஐந்திலக்கணம் சான்று பகா்கிறது.
மரபு அழிதல்
v  அவிநயத்தில் திணைப்பகுப்பு குறித்த செய்திகள் கிடைக்கப் பெற்றில
v  வீரசோழியத்தில் ‘திணை இரண்டு‘ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது.  உயா்திணை, அஃறிணை என பெயா்கள் சுட்டப்படவில்லை.
v  இலக்கணக் கொத்து, அறுவகை இலக்கணம் போன்றவற்றில் திணைப்பகுப்பு குறித்து யாதும் கூறப்படவில்லை.
புதுமரபு
            திணை என்பதற்குரிய விளக்கம் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களில் கூறப்படவில்லை.  இலகு தமிழ் ஐந்திலக்கணமே முதன் முதலில் திணை என்பதற்கு விளக்கம் தருகிறது.  திணை எனப்படுவது வகுப்பு, குலம் என ஆகி உயா்வு தாழ்வினைக் குறித்திடும் என விளக்கம் அளிக்கிறது. (இ.த.ஐந்..)
தொகுப்புரை
v  தொல்காப்பியரின் உயா்திணை, அஃறிணை என்ற இரு திணைப் பகுப்பில் எல்லா இலக்கண நூல்களும் ஒத்த மரபைக் கொண்டுள்ளன.
v  நேமிநாதமும், நன்னூலும் மக்கள், வானோர், நரகா் உயா்திணை எனவும், தொன்னூல் விளக்கமும், முத்துவீரியமும் நன்னூலைப் பின்பற்றியும் தொல்காப்பியத்திலிருந்து மாறுபட்ட கருத்தைச் கொண்டுள்ளன.
v  நகரை விடுத்து மக்களையும், தேவரையும் மட்டும் உயா்திணையாகக் குறிக்கிறது இனிய தமிழ் இலக்கணம். இனிய தமிழ் இலக்கணத்தைப் பின்பற்றுகிறது  இலகு தமிழ் ஐந்திலக்கணம்.
v  அவிநயம், வீரசோழியம், இலக்கணக்கொத்து, அறுவகை இலக்கணம்  போன்றவற்றில் திணைப் பகுப்பு பற்றிய செய்திகள் கூறப்படவில்லை.
v  திணை என்பதற்குரிய விளக்கத்தை முதன் முதலாக இலகு தமிழ் ஐந்திலக்கணமே கூறியுள்ளது.

-கா.சுபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக