செவ்வாய், 25 ஏப்ரல், 2017

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை
            மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது.  கல்லீரல் செல்கள் பித்தநீஐர வெளிப்படுத்தாத போதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற  பாதையில் ஏற்படும் அடைப்பினாலும்  காமாலை ஏற்படுகிறது.  மேலும் ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே இரத்தத்தில் உள்ள  பிலிருஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை அறிகுறிகள்
            சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சல் நிறத்தில் சிறுநீா் போன்ற அறிகுறிகளில் காணப்படும்.
சோ்க்க வேண்டியவை
            சின்ன வெங்காயம், மோர், இளநீா், பேயன் வாழைப் பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசனி,  மாதுளம் பழம், வெள்ளிரிக்காய்
தவிர்க்க வேண்டியவை
            அசைவ உணவுகள் எண்ணெய், நெய், காரம்
மஞ்சல் காமாலை நீக்கும் வழிமுறைகள்
v  அவுரி இலைகளையரைத்து, சிறிது கொட்டை பாக்கு, வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்தால் மஞ்சல் காமாலை தீரும்.
v  ஆமணக்கு, கீழா நெல்லி இலைகளை சம அளவரைத்து சிறிது எலும்மிச்சையளவு பிழிந்து காலையில் குடித்தால் மஞ்சல் காமாலை தீரும்.
v  கரிசாலையிலைகளை யரைத்து கொட்டைபாக்களவு தினம் 2 வேளை, 200மிலி. மோரில் குடித்தால் மஞ்சள் காமாலை குறையும்.
v  கீழா நெல்லி இலைகளை யரைத்து, எலுமிச்சையளவு 250மிலி மோரில் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்.
v  வில்வ இலைச்சூரணம் 1 தேக்கரண்டி, மஞ்சள் கரிசாலைச்சாறு 1 தேக்கரண்டி கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் குறையும்.
v  நில வேம்பு இலைகளை குடிநீா் செய்து பருகிவர மஞ்சள் காமாலை கட்டுப்படும்
v  சிற்றாமணக்கு கொழுந்திலைகளையரைத்து, மோரில் கலந்து குடித்தால் குணமாகும்.
v  பொன்னாவாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லியரைத்து 2 நெல்லிக்காய்யரைத்து காலை மாலை மோரில் குடித்து வர சரியாகும்.
v  பச்சை திராட்சை பழச்சாற்றை வெறும் வயிற்றில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் காமாலை குணமாகும்.
v  வேப்பங் கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு, எருமை தயிரில் காலை 3 நாட்கள் சாப்பிட்டு உப்பில்லாத பத்திய மிருந்தால் நோய் குணமாகும்.
v  முள்ளங்கி இலைச் சாற்றை சா்க்கரையில் கலந்து காலைமாலை சாப்பிட்டு வந்தால் நோய் தீரும்.
v  அரை தேக்கரண்டி கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து குடித்தால் குணமடையும்.
v  கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகினால் சரியாகும்.
v  சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு தம்ளர் நீர் சேர்த்து அரை தம்ளராக வற்ற வைத்து சர்க்கரை கலந்து அருந்தி வந்தால் குணமாகும்.
v  வில்வ இலைச்சாறு 30 மிலி எடுத்து மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகி வந்தால் நோய் குறையும்.
v  நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு பொடித்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து அருந்தினால் நோய் குணமாகும்.
v  15மி.லி கரிசலாங்கண்ணிச் சாறுடன் சா்க்கரையில் கலந்து பருகி வந்தால் நோய் குணமாகும்.

-பெ.குபேந்திரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக