செவ்வாய், 25 ஏப்ரல், 2017

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
            ஒரு  தோட்டத்தில்  நிறைய குரங்குகள் இருந்தன.  பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கு நண்பா்களாயிருந்தன.  தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப்பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும் ஒருமுறை  தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது, குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான் குரங்குகளுக்குச் சந்தோஷம் ஆனால் அவற்றுக்கு ஒரு பிரச்சனை எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீா் ஊற்றுவது என்று தெரியவில்லை,   அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை வோ் பெரியதா இருந்தா நிறைய தண்ணீா் ஊத்துங்க, சின்ன வேராக இருந்தா குறைந்தளவு தண்ணீா் ஊத்துங்க” என்று யோசனை சொன்னான். வெளியூா் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி அத்தனைச் செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன என்னாச்சு? என்றான் தோட்டக்காரன், ”வோ் பெருசா இருக்கா சின்னதா இருக்கானு பார்ப்பதற்காக  செடியெல்லாம் பிடிங்கினோம் என்றன குரங்குகள். தகுதியில்லாதவா்களிடம் பொறுப்பைக் கொடுத்தால் விளைவு மோசமாக இருக்கும் என்பதே இதன் நீதி.
-இரா.கார்த்திக்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக