செவ்வாய், 14 மார்ச், 2017

விதியை மாற்ற முடியாது


            எமதர்மராஜன் ஒரு குருவியை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். அடடா..  குருவிக்குக்  கேடு காலம் வந்துவிட்டதே என்று கருதிய  கருடன்  உடனே அந்தக் குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது. அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் குருவியை விழுங்கிவிட்டது. குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று வருந்திய கருடன்.  குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதா்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது. கருடனே என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய், என்றார் எமதா்மராஜன் நான் அந்தக்குருவியை உற்று நோக்கக் காரணம், அந்தக்குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது அது எப்படி நிகழப்போகிறது? என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன் அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார். வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அதுதான் நடக்கும்.
-ஆ.சகுந்தலா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக