செவ்வாய், 14 மார்ச், 2017

திருக்கோயிலை வணங்கும் முறைகள்


முன்னுரை
          கோயிலுக்குப் போய் இறைவனை வழிபட வேண்டும் என்ற நியதி இல்லை.  தூய்மையான எந்த இடத்திலிருந்தும் தனிமையில் இறைவனைத் தியானிக்கலாம்.  அல்லது வீட்டுப் பூசையறையில் வழிபடலாம், எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மன ஒருமையுடனும் மன அமைதியுடனும் இறைவனை வழிபடத் தகுந்த மிக மிகப் பொருத்தமான இடம், கோயில்.  கோயிலில் இறைவனை வழிபடத் தகுந்த எல்லா வசதிகளும் இருக்கின்றன.  விதிமுறைகளின் படி குறித்த காலங்களில் பூசைகள், விழாக்கள் முதலியன அங்கு நடைபெறுகின்றது தனித்த நிலை வழிபாடும் கூட்ட நிலை வழிபாடும் அங்கு உண்டு  பசுவின் உடம்பெல்லாம்  பால் நிறைந்திருந்தாலும் அதன் மடியின் வழியாகத்தான் பால் வழிகின்றது.  அதைப்போல நிலத்தின் கீழே எல்லா இடங்களிலும் நீர் பரவியிருந்தாலும், கிணற்றின் வழியாகத்தான் நீர் ஊறுகின்றது.  அதைப் போல இறைவன் எங்கும் நிறைந்து பரவியிருந்தாலும் அவனது பேரருள் வழியுமிடம் கோயில் ஊறிப் பெருகுமிடம் கோயில் அந்தபேரருளைப் பெறுவதற்காக அனைவரும் கோயிலுக்குப் போகத்தான் வேண்டும் பக்தா்களின் உள்ளத்தில் ஊறிப் பெருக கெடுத்தோடுகின்ற பக்தி வெள்ளம், இறைவனது பேரருள் கடலில் சங்கம் ஆவதே உண்மையான ஆலய வழிபாடு

வணக்க முறைகள்

            கோயிலுக்குள் இறைவனை வணங்கும் முறைகள் இரண்டு வகைப்படும். 1.நின்று வணங்கல் 2. கிடந்து அல்லது விழுந்து வணங்கல் என்பனவாகும் அவை

திரியாங்கம்

            தெய்வம், துறவிகள் முனிவா்கள் முதலியவர்களை வணங்கும் போது தலைக்கு மேலும் பெற்றோர், ஆசிரியா் முதலியவா்களை வணங்கும் போது மகத்துக்கு நேரும் உறவினா்கள் நண்பா்கள், விருந்தினா்கள் முதலியவா்களை வணங்கும் போது கழுத்துக்கு நேரும் கைகளைக் குவித்து வணங்குவதும் முறையாகும் கைகள் குவிந்திருக்கும் போது தலை தாழிந்திருக்க வேண்டும்.

பஞ்சாங்கம்
            தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு ஆகிய ஐந்து அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குவது பஞ்சாங்க வணக்கம் இது பெண்களுககு உரியது

அட்டாங்கம்

            தலை, கை இரண்டு, காது இரண்டு தோள்கள் இரண்டு மோவாய் ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே பொருந்தும்படி கிடந்து வணங்குவது அட்டாங்க வணக்கம் இந்த வணக்க முறை வழக்கத்தில் இல்லாதது ஆண்களுக்கு உரியது.

சாஷ்டாங்கம்
            சாஷ்டாங்கம் சக + அஷ்ட+ அங்கம் தலை, காது, இரண்டு, மார்பு, கை இரண்டு கால்கள் இரண்டு ஆகிய எட்டு அங்கங்களும் நிலத்திலே பொருந்தும் படி விழுந்து வணங்குவது அஷ்டாங்க வணக்கம் இதுவும் ஆண்களுக் குரியது.

            சாஷ்டாங்க வணக்கத்தைத் “தாண்டமிடுதல் என்று தமிழில் கூறுகின்றனா்.  எந்த ஆதாரமும் இல்லாத தண்டம் (தடி) எப்படி நிலத்திலே விழுந்து விடுமோ அப்படி நிலத்திலே விழுந்து வணங்குவது ”தண்டமிருதல்”ஆகும்.  ஆதரவற்ற தடிக்கு நிலமே அடைக்கலம், ஆதரவற்றவா்களுக்கு இறைவனை அடைக்கலம் என்ற உட்பொருளைச் சாஷ்டாங்க வணக்கம் உணா்ந்துகின்றது.பஞ்சாங்க, அட்டாங்க  வணக்கங்களைக் குறைந்தது மூன்று முறை செய்ய வேண்டும். நிலத்தில் படிந்து வணங்கும் போது முா்த்தங்களை நோக்கிக் கால்களை நீட்டக் கூடாது கொடி மரத்திற்கு அருகில் பஞ்சாங்கமாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கலாம்.  கோயிலின் வேறு எந்தப் பகுதியிலும் விழுந்து வணங்கக் கூடாது.  காரணம் எந்த மூா்ததத்தை நோக்கியவது கால்களை நீண்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

            கோயிலுக்குள் நுடைந்தவுடனும், வழிபாடுகளை முடித்துக் கோயிலை விட்டு வெளியே வரும் போதும் கொடி மரத்தருகில் விழுந்து வணங்க வேண்டும் வேறு எப்போதும் விழுந்து வணங்கக் கூடாது. கோயிலில் தெய்வத்தைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது   கோயிலில் அனைவரும் சமம் சாஷ்டாங்க வணக்கம் செய்யும்போது வணங்குபவரின்  மார்பில் படிந்து அவா்களைப் புனிதமாக்க வேண்டும் என்பதற்காகவே ஆலய வழிபாட்டில் சாஷ்டாங்க வணக்கம் செய்ய வேண்டும் என்பது விதிக்கப்பட்டுள்ளது  தொண்டரடிப் பொடிக்கு அத்தனை மகிமை! கொடி மரத்தருகில் விழுந்து வணங்கும் போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய சன்னதியானால், வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும் தெற்கு  அல்லது வடக்கு நோக்கிய சன்னிதியானால் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும் புண்ணியத் திசைகளாக மதிக்கப்படுகின்ற கிழக்கு வடக்கு திசைகளை நோக்கி கால்களை நீட்டி எப்போதும் வணங்கக் கூடாது

            இறைவனை வணங்கும் போது கண்களாகிய வண்டுகள்  அவனது திருவடித் தாமரைகளையே மொய்த்து பேரருள் தேனைப் பருகி, களிப்படைய வேண்டும் பக்தி மயக்கம் கொள்ள வேண்டும்

முடிவுரை
            திருக்கோயிலை எவ்வாறு எல்லாம் வணங்க வேண்டும் என்ற சில விதி முறைகள் உண்டு அவை திரியாங்கம், மஞ்சாங்கம், அட்டாங்கம் சாஷ்டாங்கம் ஆகும் ஆண்கள், பெண்கள் இருபாலா்கும் வணங்கும் விதி முறைகள் வெவ்வெறாக உள்ளது. பஞ்சாங்கம் வணக்க முறை பெண்களுக்கும் அட்டாங்கம் சாஷ்டாங்கம் வணக்க முறை ஆண்களுக்கு உரியது விதிமுறைகள் மூலம் வழிபட்டால் நாமும் எல்லா நன்மைகளையும் பெற முடியும்.

-கு.கங்காதேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக