செவ்வாய், 14 மார்ச், 2017

சேக்கிழார் விழா


            அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்வியலைப் புராணமாக  இயற்றியவா்; சேக்கிழார். இச்சேக்கிழார் பெருமானுக்கு  தேவகோட்டையில் உள்ள நகரச்சிவன் கோவிலில், கருவறையுடன் கூடிய சன்னதி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  சிவன் கோவிலில் சேக்கிழாருக்கு எனத் தனிச் சன்னதி அமைந்திருப்பது தேவகோட்டையில் மட்டும்தான் இருக்கிறது. இக்கோவிலுக்கான மணி செய்கோனிலிருந்து வரவழைக்கப்பட்டது தேவகோட்டையச் சார்ந்த வன்றொண்டச் செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தேவகோட்டைக்கு வந்து சேக்கிழார் சன்னிதியின் முன்பிருந்த பிள்ளைத்தமிழ் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சேக்கிழார் பெருமானின் சிலை அவரது அவதாரத் தலமாகிய குன்றத்தூர் மலையிலிருந்து கொண்டு வந்த கல்லினால் அமைக்கப்பெற்றது. இதைத் தமிழ்வள்ளல் சேவு.மெய்யப்பச்செட்டியார், பாலகவி இராமனாதன் செட்டியார், சோம.ராமனாதன் செட்டியார் போன்றோர் இணைந்து  இச்செயலைச் செய்தனா் சேக்கிழாருக்கு விழா எடுக்க அமைப்பு ஒன்றை ஏற்படுத்த விரும்பி சேக்கிழார் திருநாட்கழகம் 1947-ஆம் ஆண்டு தேவகோட்டையில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழுக்குச் தொண்டாற்றிச் சிறந்த சேக்கிழாரைத் தெய்வமாகப் போற்றிப் பரவி  சேக்கிழாருக்கென    விழா நடைபெறுவது  தேவகோட்டையில் நடைபெறுது குறிப்பிடத்தக்கது.
-சு.லாவண்யா



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக