புதன், 20 பிப்ரவரி, 2019

வாய்விட்டு சிரித்தால்..


                வாய்விட்டு சிரித்தால்..

                சிரிப்பானது மூன்று மாத குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றது. சிரிப்பு என்பது இதழ்களால் மறைக்கப்பட்ட சொர்க்கம். சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீh;கள். இதுவே சிரிப்பின் தத்துவமாகும்.
                சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதன் காரணமாக சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கவும்.
                கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். மகிழ்ச்சியான அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான எண்ணங்களை பரப்பும். சோக அலைகள் நம்மைச் சுற்றி எதிர்மறையான எண்ணங்களை பரப்பும்.
                ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்க என்று பொருள். அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவு கோலமாகவும் சிரிப்பு உள்ளது.
                சிரிப்பு என்பது மனம் சம்பந்தப்பட்டதாகும். மனம் என்பது ஒரு நன்றியுள்ள சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான முதலாளி என்றும் சொல்வார்கள்.
                எனவே சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நன்கு தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டு விடுவார்கள். சிரிப்பு என்பது சிநேகத்துடன் முதல் தூதுவாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும் இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது.
                புன்னகையும்இ சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமானவர்களை கவர்கின்றன. நமது வாழ்நாளை நீடிக்கின்றது.
ஆம் நண்பார்களே .......
                எனவே சுயமாக சிரிக்க முடியாவிட்டால் மருந்தாக நினைத்து சிரியுங்கள். அது உங்கள் உடலுக்கும் நல்லது.

                                                                                                           . ரெஜினா பேகம்

பொது அறிவு


                   பொது அறிவு

1. தொடர்ச்சியாக 8 மாதங்கள் பறக்கும் பறவை எது?
                                                nlu;d;
2. பல துண்டுகள் வெட்டினாலும் உயிர் வாழும் உயிரினம்?
               மண்புழு
3. கூடுகட்டி வாழும் ஒரே பாம்பு இனம் எது?
               இராஜநாகம்.
4. வாழ்நாள் முழுவதும் நீர் அருந்தாத பாலூட்டிகள்?
             எலி கங்காரு
5. உலகில் எத்தனை வகை கொசுக்கள் உள்ளன?
             48 வகைகள்
6. பின்புறமாக மரத்தில் ஏறும் விலங்கு எது?
               கரடி
7. யானைக்கு நுகரும் நரம்புகள் எங்கு அமைந்துள்ளது?
              வாய்
8. குஞ்சுகளுக்கு பாலூட்டும் ஒரே பறவை எது?
              சமபாநால்ட்
9. நர் யானைகள் அதிகம் காணப்படும் இடம் எது?
             ஆப்பிரிக்கா
10. அதிக மொழிகள் பேசப்படும் நாடு?
           இந்தியா
11. எந்த நாட்டிலும் பூனைக்கு கோவில் உள்ளது?
            எகிப்து.
12. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி எது?
          சீன மொழி
13. தவளைக்கு ஒலியை உணரும் திறன் எதில் உள்ளது?
            கண்
14. எலிகள் மூலம் பரவும் நோய் எது?
            பிளேக்
15. மீன் எண்ணெயில் குணமாகும் முக்கிய நோய்?
            ரிக்கெட்ஸ்
16. உணவை கழுவி சாப்பிடும் விலங்கு எது?
            ரக்கூன்
17. ஒரு மரத்தை தன் பற்களால் முறிக்க வல்ல விலங்கு ?
             பீவர்
18. அடைகாக்கும் ஆண் பறவை இனம் எது?
          பெங்குவின்
19. உலகில் தோன்றிய முதல் உயிரினம் எது?
            அமீபா
20. தலைகீழாக தொங்கும் பாலூட்டி எது?
           வௌவால்
21. புலிகள் அதிகமாக காணப்படும் கண்டம் எது?
           ஆசியா
22. கண்ணிலே காது உடைய பிராணி எது?
           பாம்பு.


                                                                                                                                                . மீனாட்சி


முகநூல்



                                                                             முகநூல்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சொல்லி வைத்தான் கணியன் அன்று.....
உண்மையாக்கிக் காட்டியது
முகநூல் இன்று!

முகமறியா நட்புக்களின்
இணைவிடம்.....
இதன்  மூலம்
கற்றதும் பெற்றதும்
ஏராளம்!

என்று காண்போம்?
என்று ஏங்கிய பல உறவுகளை
ஒன்றிணைத்த
உலகப் பொது நூல்!

எனினும்
அறிவியல் வளர்ச்சி
நன்மைக்கு மட்டுமல்ல
தீமைக்கும் வழி வகுக்கும்
என்றும் விதிக்கு
முகநூல் மட்டும்
விதிவிலக்கா என்ன?

இளைய சமுதாயத்தின்
நேரத்தை விழுங்குவதில்
முதலிடம்
முகநூலுக்கே!

மனதைக் கெடுக்கும்
பல விடயங்கள்
முகநூலிலும்
உண்டு........

தீமையை விடுத்து
நன்மைகளைக் கைக்கொள்வோமாயின்
முகநுhல் என்றும்
முத்தான
பொக்கிஷமே!

                                                                                                                                                கா.சுபா

அறிவோம்..


                              அறிவோம்..
v          காந்தியடிகளுக்குமகாத்மாபட்டம் கொடுத்தவர் - ரவீந்திரநாத் தாகூர்
v          தாகூருக்குகுருதேவ்பட்டம் கொடுத்தவர் - காந்தியடிகள்
v          காந்தியடிகளுக்குதேசப்பிதா பட்டம் கொடுத்தவர் - சுபாஷ் சந்திரபோஸ்
v          சுபாஷ் சந்திரபோஸீக்குநேதாஜிபட்டம் கொடுத்தவா; - காந்தியடிகள்
v          .வே.சாவுக்குதமிழ்த்தாத்தாபட்lம் கொடுத்தவா; - கல்கி கிருஷ்ணமூர்த்தி
v          கம்பருக்குகவிச்சக்கரவர்த்திபட்டம் கொடுத்தவர் - நாதமுனி
v          ..சிதம்பரனாருக்குகப்பலோட்டிய தமிழன்பட்டம் கொடுத்தவர் - .பொ. சிவஞானம்

                                                                                                                                                தே.தீபா

குறையொன்றும் இல்லை


                      குறையொன்றும் இல்லை

                ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
                இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
                குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
                இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொறுக்க முடியாத பானை அதன் எஜமானைப் பாu;த்துப் பின்வருமாறு கேட்டது.
                ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்.
                அதற்கு விவசாயிபானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில் உன் பக்கம் இருக்கும் அழகான G+ச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தொயீயும். அதனால் தான் வழி நெடுக G+ச்செடி விதைகளை விதைத்து விட்டேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரால் இன்று பொயீதாக வளா;ந்து எனக்கு தினமும் அழகான G+க்களை அளிக்கின்றன. இவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள G+க்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்.
                இதைக் கேட்ட பானை கேவலமாக உணா;வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப பற்றிக் கவலைப்படாமல் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

                                                                                                                                                                                                                                சு. லாவண்யா

நகரத்தாரின் கோயில்பணி


                  நகரத்தாரின் கோயில்பணி

                கோயில் உள்ள ஊரில் தான் குடியிருக்க வேண்டும் என்பது பெரியோh; வகுத்த மரபு. ஆனால் குடியிருக்கும் ஊரிலெல்லாம் கோயில் கட்டுவது நகரத்தார் இயல்பு. நகரத்தார் புதிதாகக் குடியேறும் ஊரிலெல்லாம் கோயில் கட்டுவது நகரத்தார் இயல்பு. நகரத்தார் புதிதாகக் குடியேறும் ஊரிலெல்லாம் முதன் முதலில் கோயில் கட்டும் திருப்பணியிலேயே ஈடுபட்டுள்ளார்கள்.
                கி.பி. 1501 ஆம் ஆண்டில் கல்வாச நாட்டில் இளையாத்தன் குடியான் குலசேகரபுரத்திலிருந்து இரணிA+ருக்கு வந்த நகரத்தார்கள். ஓர் அம்மன் கோயிலை அமைத்து வழிபடுவதற்காக இரணிa+ர் மக்களால் கோயில் கட்டுவதற்கான இடம் சுதந்திரமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
                நகரத்தார் வாழும் 78 ஊர்களிலும் நகரச் சிவன் கோயிலைக் கட்டியுள்ளனர். அக்கோயில்கள் தொடர்ந்து செயல்பட அறக் கட்டளைகளையும் திருக்குளம் பசுமடம் நந்தவனம் தண்ணீர் பந்தல் தென்னந்தோப்பு நன்செய் புன்செய் நிலங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
                கோயில்களுக்கு அறப்பணி செய்வதற்காகவே நகரத்தார்கள் தங்கள் தொழிலில் இறைவன் பெயரிலும் பங்கு வைத்து அதில் வரும் இலாபத்தைக் கோயில் பணிகளுக்குக்கே செலவிடுகின்றனர். இது தவிர கோயில் பணிகளுக்கே செலவிடுகின்றனர். இது தவிர கோயில் என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பணம் கொடுத்து வருகின்றனர். கும்பாபிடேகம் முதலிய பெரும் பொருட்செலவு வரும்பொழுதுஆஸ்தி வரிஎன்ற பெயரில் தங்கள் சொத்திற்கு ஏற்ற வகையில் (1000 ரூபாய்க்கு 50 பைசா என்ற முறையில்) பெரும் நிதி உதவியினைச் செய்கின்றார்கள்.
                நகரத்தார்கள் தங்களுக்குள் ஒன்பது பிரிவினராக ஒன்பது கோத்திரங்களைக் கொண்டு வாழ்கிறார்கள். அந்த ஒன்பது கோத்திரங்களையும் ஒன்பது கோயிலின் அடிப்படையிலே அமைத்துக் கொள்கின்றனர்.
                இளையாத்தன்குடி> மாத்தூர்> வியரவன்பட்டி> நேமம்> இலுப்பைக்குடி> சூரைக்குடி> வேலங்குடி> பிள்ளையார்பட்டி> இரணிa+u; என்னும் ஒன்பது கோயிலின் அடிப்படையிலேயே திருமணம் முதலியவற்iw மேற்கொள்கின்றனர். இந்த ஒன்பது கோயில்களுக்கும் நகரத்தார்கள் அதிக அளவு பொருள் செலவு செய்துள்ளனர்.
                நகரக் கோயில்களுக்கும் தங்கள் சொந்த ஊயீல் உள்ள கோயில்களுக்கும் உதவியது தவிர தங்களது u;களுக்குப் பக்கத்தில் உள்ள பிற h;களில் உள்ள கோயில் திருப்பணிக்காகவும் 123 தேவாரத் தலங்களிலும் 6 பிரபந்த தலங்களிலும் 33 பிற தலங்களிலும் கோயில் திருப்பணிக்காக இவாu;கள் இவu;கள் பலத் தொண்டுகளைச் செய்துள்ளனu;;.
                இவர்கள் நம் நாடு தவிர இலங்கை> பர்மா> மலேசியா> சிங்கப்g+u; வியட்நாம்> தாய்லாந்து> இந்தோனேசியா> மொhPசியசு நாடுகளிலும் கோயில் திருப்பணிக்காக அதிகமாகச் செலவிட்டு வருகின்றனர். எனினும் நன்கொடையாகக் கொடுத்த பணத்தைக் கூறி விளம்பரமோ தற்பெருமையோ தேடிக் கொள்ள விரும்பாதவu;s;.

                                                                                                                                                                                                                . முத்துமணி